திருப்பூர் எஸ்.பி.ஐ. காலனி அருகே கழிவுநீர் கால்வாயை ஒட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு கழிவுநீர் கால்வாயை ஒட்டி ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.