சேலம் கன்னங்குறிச்சி பிரதான சாலையில் இருந்து புது ஏரி சாலை வழியாக தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் உள்ள பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லேசான பள்ளம் ஏற்பட்டது. தற்போது அது மிகப்பெரிய பள்ளமாக மாறியதால் வாகனங்கள் சிக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பள்ளத்தை சுற்றி கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.