கம்பம் உழவர் சந்தையை சுற்றிலும் சிலர் சாலையை ஆக்கிரமித்து காய்கறி கடைகளை அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைகாக செல்லும் நோயாளிகள் என பலர் உழவர் சந்தையை கடந்து செல்லவே பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும்.