கடலூா் 4-வது வார்டு வில்வநகர், பாப்பான் தோட்டம் பகுதிகளில் உள்ள சாலை பலத்த சேதமடைந்துள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சாலை பள்ளத்தில் சிக்கி அடிக்கடி சேதமடைகின்றன. சிறிதளது மழை பெய்தால் கூட மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.