கோபிசெட்டிபாளையம் எஸ்.பி. நகரில் இருந்து பவளமலை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்ல சிரமமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் நடந்து செல்ல முடியவில்லை. கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?