சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்கி வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் வாகனங்களும் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி பழுதாகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?