குண்டும், குழியுமான சாலை

Update: 2026-02-01 19:26 GMT

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரத்தில் இருந்து பாச்சங்காட்டுபாளையம் வழியாக கணபதிபாளையம் வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இந்த பகுதி தொழிற்சாலை நிறைந்த பகுதியாகும். இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் ெசல்வதற்கே அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை ஆய்வு செய்து உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கதிரவன், அருள்புரம்.

மேலும் செய்திகள்