கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் பிரிவு சாலையில் மேம்பாலம் அருகில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றன. குறிப்பாக பல கனரக வாகனங்கள் குழியில் சிக்கி நீண்ட நேரம் கழித்தே அங்கிருந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சூளகிரி-உத்தனப்பள்ளி சாலையில் மேம்பாலம் அருகில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.
-பிரபு, சூளகிரி.