ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஆற்காடு நகருக்குள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதை தவிர்க்க கடந்த வாரம் ஆற்காடு அருகில் உள்ள தாஜ்புரா பகுதியில் இருந்து ஆற்காடு மாசாபேட்டை வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தச் சாலை அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் மீண்டும் ஆற்காடு நோக்கி வரவேண்டும் அல்லது மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலை சென்றடைந்து மேம்பாலம் வழியாக மீண்டும் தேசிய நெடுஞ்சாலைக்கு வர வேண்டும். இதனால் பயண தூரம் அதிகமாகிறது. மேலும் ஆற்காடு நகருக்குள் வருவதால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் உருவாகிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேப்பூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையை சென்றடைய புதிதாக சாலை அமைக்க வேண்டும்.
-நெடுஞ்செழியன், சமூக ஆர்வலர், ஆற்காடு.