திருப்பூர் காசிபாளையத்தில் இருந்து நல்லூர் செல்லும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. இதனால் சாலையில் சில மீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோட்டப்பட்டது. தற்போது அந்த பகுதியில் சாலை மோசமாக உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் பனியன் நிறுவனங்களுக்கு வரும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே போக்குவரத்து நிறைந்த அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.