ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2025-06-29 16:30 GMT

நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் ஊராட்சிக்குட்பட்டது மணியனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் 3 கி.மீட்டர் சாலை கடந்த சில ஆண்டுகளாகவே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. ராயர்பாளையம், மோளிப்பள்ளி, நல்லிபாளையம் உள்பட பல்வேறு கிராம மக்கள் மணியனூர், கந்தம்பாளையம், பரமத்திவேலூர், கரூர் செல்ல தூரம் குறைவு என்பதால் இந்த சாலையைத்தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் கரடு, முரடான சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள். எனவே பயன்படுத்த முடியாத சாலையை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கார்த்தி, மணியனூர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது