கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று வருபவர்கள் அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் அங்குள்ள வனத்துறை சோதனை சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள 2 வேகத்தடைகளின் உயரம் அதிகமாக இருப்பதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் சில சமயங்களில் தட்டுத்தடுமாறி செல்கின்றன. அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே வேகத்தடைகளின் உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-ராமன், காரவள்ளி.