வெண்ணந்தூர் அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவில் காவலர் குடியிருப்பு எதிரே நடுப்பட்டி சாலை செல்கிறது. இந்த சாலை முகப்பில் இருபுறங்களிலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் எதிரெதிர் வாகனங்கள் செல்ல கடும் சிரமப்படுகின்றன. எனவே நெடுஞ்சாலை துறையினர் சாலை ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சேகர், வெள்ளை பிள்ளையார் கோவில்.