திருப்பூர்- ஓலப்பாளையம் மெயின் ரோடு பஸ் நிறுத்தம் அருகில் ரோட்டை கருவேலம் மரம் செடிகள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் முட்புதர்கள் இருபபது தெரியாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. ஆகவே சாலையோர புதர்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
பாண்டியன், திருப்பூர்.