வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2025-06-22 15:40 GMT

தேவூர் அருகே கொட்டாயூர் பகுதியில் எடப்பாடியில் இருந்து கல்வடங்கம் செல்லும் சாலையும், கோனேரிப்பட்டியில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலையும் சந்திக்கிறது. இந்நிலையில் இந்த நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு வேகத்தடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-திவாகர், தேவூர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது