சாலையில் பெரிய பள்ளம்

Update: 2025-06-22 15:29 GMT

பாலக்கோடு அடுத்த கரகதஅள்ளி அருந்ததியர் காலனி தார்சாலையில் உள்ள தரைப்பாலம் ஒரு பகுதி உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் அதில் விழுந்து உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இதே நிலைதான். இது குறித்து பாலக்கோடு வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முனுசாமி, கரகதஅள்ளி.

மேலும் செய்திகள்