ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே பத்தலபள்ளியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மொத்த காய்கறி விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த பகுதியில் வாகன நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இந்தநிலையில் காய்கறி மார்கெட்டுக்கு எதிரில் உள்ள சாலை நீண்ட காலமாகவே குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
-எஸ்.மாதேஷ், ஓசூர்.