சேந்தமங்கலம் அருகே உள்ள மரூர்பட்டியில் இருந்து என்.ஜி.ஓ. காலனி வழியாக நாமக்கல்-சேலம் பிரதான சாலைக்கு செல்லும் குறுக்குப்பாதை அமைந்துள்ளது. அந்த வழியாக சின்ன முதலைப்பட்டி, கம்ளாய், பொன் நகர் போன்ற பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த சாலை பகுதியில் பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-சேகர், சேந்தமங்கலம்.