ஓசூர் மாநகராட்சி 45-வது வார்டில் காடி பாளையத்தில் ஷாயிநாத் தெரு, கங்கா பவானி தெருக்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இந்த சாலை வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். அவசர தேவைக்கு கூட காலையை பயன்படுத்த முடிவதில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
-கவிதா, காடி பாளையம்.