கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகில் சர்வீஸ் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளன. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த சாலை மேலும் சேதமடைந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதன்காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-முருகன், கிருஷ்ணகிரி.