பந்தலூர் தாலுகா மேங்கோரேஞ்ச் அருகே கல்லட்டி பகுதியில் நெடுஞ்சாலை செல்கிறது. இதன் ஓரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அங்கு வனவிலங்குகள் மறைந்து இருந்தாலும் தெரியாது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்குள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.