பந்தலூர் தாலுகா அலுவலகம் செல்லும் சாலையோரத்தில் எப்போதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள், அலுவலர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு சிறு பாலம் அமைத்து தர வேண்டும். அத்துடன் அந்த சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைத்து தர வேண்டும்.