சாலையோர கிணறால் விபத்து

Update: 2025-06-15 11:12 GMT



ஊத்துக்குளி வட்டம் முரட்டு பாளையம் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் வளைவில் பயனற்ற கிணறு உள்ளது. சாலையோரத்தில் அபாய நிலையில் கிணறு உள்ளதால் வாகன விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் வாகனங்கள் கிணற்றில் இறங்கினால் பெரும் விபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதேபோல் மூடி இல்லாததால் கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே அபாய நிலையில் உள்ள கிணற்றை மூட வேண்டும். இல்லையென்றால் விபத்து ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மருதாசலம், குன்னத்தூர்.

மேலும் செய்திகள்