திருச்செங்கோடு அருகே கொன்னையார் முதல் பருத்திப்பள்ளி வரை சுமார் 4 கி.மீட்டர் தூரத்திற்கு சாலை உள்ளது. இந்த சாலை ராசிபுரம் மெயின் ரோட்டில் தொடங்கி, கொன்னையார் ஆத்துமேடு, எருக்கலாங்காடு, சீதக்காடு முனியப்பன் கோவில் மற்றும் பருத்திப்பள்ளி இணைப்பு வரை செல்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. எருக்கலங்காடு கிராமத்திற்கு அருகில் உள்ள ஏரி மழைக்காலங்களில் நிரம்பி வழிகிறது. இதனால் தண்ணீர் நிரம்பி வழியும்போது ஏரி ஓரமாக தார்சாலை அமைக்கப்பட்டதால் மழைநீர் தேங்கி, தார்சாலை சேதம் அடைந்து, சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே சாலை புதுப்பிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
-சிவா, திருச்செங்கோடு.