வெண்ணந்தூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள உயர்மின் கோபுர விளக்கு பழுதானது. இதனால் அந்த பகுதி இரவு முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் விளக்கை சரி செய்ய வேண்டும்.
-ராமச்சந்திரன், வெண்ணந்தூர்.