கொல்லிமலைக்கு தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் 51-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் சமீபத்தில் ஒரு சரக்கு வாகனம் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி ஆபத்தான நிலையில் உள்ள உடைந்த தடுப்பு சுவரை விரைவாக சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மனோ, கொல்லிமலை.