நங்கவள்ளி பஸ் நிறுத்தம் அருகில் குஞ்சாண்டியூர் செல்லும் வழியில் சோமேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே குப்பனூர் பிரிவு சாலையில் ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டு பாதுகாப்பாக இருந்தது. கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இந்த வேகத்தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த வளைவு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நீக்கப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜன், சேலம்.