தார்சாலையாக மாற்ற கோரிக்கை

Update: 2026-07-19 14:03 GMT

கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி வெண்ணைமலை பசுமை நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மண் சாலை தார்சாலையாக மாற்றப்படாததால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இவ்வழியாக செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, இந்த மண் சாலையை தார்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்