திருப்பூர் மாநகர பகுதியில் அய்யப்பா நகர் உள்ளது. இங்குள்ள சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த குழாய் உடைப்பை அதிகாரிகள் சரி செய்தனர். ஆனால் குடிநீர் குழாய் உடைப்பால் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் சரி செய்யவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் குண்டும், குழியுமான சாலையில் தண்ணீர் தேங்குவதால் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.