பெரியகுளம் சாலையில் உள்ள மையத் தடுப்பு சுவரின் அருகே அதிகளவில் மணல் குவிந்து காணப்படுகிறது. அதோடு காற்றில் மணல் பறந்து வாகன ஓட்டிகள், பொதுமக்களின் கண்களில் விழுகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலைதடுமாறும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சாலையில் குவிந்து கிடக்கும் மணலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.