புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், திருமயம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ராமாயண மடம் வழியாக மாதா கோவில் செல்லும் தார்சாலை முற்றிலும் சேதமடைந்து, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறும் இச்சாலையால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.