புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் கத்தகுறிச்சி ஆவுடையாப்பட்டி பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படாமல் சாலை அமைக்கப்பட்டதால், பஸ்கள் நிற்பதற்கும், மழைநீர் வெளியேறுவதற்கும் போதிய வழியில்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.