நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தொப்பம்பட்டி கிராமம். இங்கிருந்து பச்சுடையாம்பாளையம் செல்லும் தார் சாலை சேதமடைந்து கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2, 4 சக்கர வாகனங்களில் செல்வோர் அந்த சாலையில் தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணதாசன், ஒடுவன்குறிச்சி.