கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி

Update: 2025-06-01 17:16 GMT

பழனியை அடுத்த மேற்கு ஆயக்குடியில் தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் பள்ளமும் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு தரைப்பாலம் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட தரைப்பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்