குண்டும், குழியுமான சாலை

Update: 2025-06-01 11:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் உள்ள ஐயனார் கோவிலில் இருந்து உருமநாதர் கோவில் வரை ஒரு கிலோ மீட்டர் தார் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலை இப்பகுதியில் உள்ள அய்யனார் கோவில் திருவிழாவின்போது தேர் செல்லும் சாலையாகவும் உள்ளது. பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுக்கும்போது மிகுந்த சிரமத்தோடு தேரினை வடம் பிடித்து இழுக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்