கோவை மாநகராட்சி 92-வது வார்டு சுகுணாபுரம் செந்தமிழ் நகர் விநாயகர் கோவில் அருகே சாக்கடை கால்வாய் மீது சிறிய பாலம் அமைத்து சாலை போடப்பட்டு உள்ளது. இங்கு கால்வாயை தூர்வார சிறிய குழி அமைத்து சிமெண்டு மூடி போட்டு உள்ளனர். மூடி அமைந்துள்ள பகுதியில் சாலை உடைந்து மற்ெறாரு குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். குறிப்பாக இரவில் விபத்துகள் அதிகம் நடக்கிறது. எனவே அந்த குழியை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.