பந்தலூர் அருகே கோட்டப்பாடியில் இருந்து மழவன் சேரம்பாடி செல்லும் சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அவற்றின் கிளைகள் சாலை வரை நீண்டு காணப்படுகின்றன. அவை இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. அத்துடன் புதர்களால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் நின்றால் கூட தெரிவது இல்லை. எனவே அங்குள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.