சாலையோரத்தில் காத்திருக்கு ஆபத்து

Update: 2025-06-01 09:55 GMT

பல்லடம்- மங்கலம் சாலையில் ஆறுமுத்தம் பாளையம் அறிவொளி நகர் பிரியும் பகுதியில் பி.ஏ.பி. பெரிய வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பகுதியில் ஏற்கனவே ஒரு லாரி தலை கீழாக கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. காரணம் சாலையோரத்தில் ஆபத்தாக பெரிய பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. பெரிய வாய்க்கால் மற்றும் சிறிய வாய்க்கால் நடுவில் 20 அடி அகலம் கொண்ட மண்பாதையில் உள்ள பள்ளத்தை சீரமைத்து தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜசேகர், மங்கலம்.

மேலும் செய்திகள்