சாலை இல்லாத சுடுகாடு

Update: 2025-04-27 14:40 GMT

பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஒத்தை அடி பாதையாக உள்ளது. இதனால் வயல்வெளி வழியாக இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் போது அச்சத்துடனே அப்பகுதி பொதுமக்கள் செல்கின்றனர். எனவே சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கந்தன், தர்மபுரி.

மேலும் செய்திகள்

சாலை பழுது