முழுக்கோடு ஊராட்சியில் பொற்றிவிளையில் இருந்து கள்ளிக்காடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து குண்டும்- குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்றநிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைத்து தார்சாலையாக மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.