கோவை சரவணம்பட்டியில் இருந்து விசுவாசபுரம் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி வந்ததால் சாலையும் சேதம் அடைந்தது. அங்கு விபத்து ஏற்படாமல் தடுக்க பிளாஸ்டிக் தடுப்புகளை வைத்து உள்ளனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் குடிநீர் குழாயை சீரமைக்கவில்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு குடிநீர் குழாயில் ஏற்பட்டு உள்ள உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைத்து தர வேண்டும்.