கிருஷ்ணகிரி ரவுண்டானா சப் ஜெயில் சாலை மற்றும் சேலம் சாலையின் இருபுறமும் பழைய இருசக்கர வாகன விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடையில் விற்பனைக்கு வைத்துள்ள வாகனங்களை சாலையின் இருபுறமும் நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தி உள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடைபாைதயை ஆக்கிரமித்துள்ள இருசக்கர வாகன கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
-சபரி, கிருஷ்ணகிரி.