கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் பல இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் இரவு நேரத்தில் தெரிவதே இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் விபத்தில் சிக்க நேரிடுகிறது. இதேபோல ஜக்கப்பன் நகர் செல்லும் சாலையிலும் பல இடங்களில் உள்ள வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. எனவே வேகத்தடைகள் தெரியும் வகையில் வர்ணம் பூசி, ஒளிரும் பட்டைகள் பொருத்திட வேண்டும்.
-கிரண், கிருஷ்ணகிரி.