திருச்சி கருமண்டபம் ஜெயநகர் பகுதியில் உள்ள சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், தற்போது முற்றிலும் சிதிலமடைந்த போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.