சேலம் சங்கர் நகர் பிரதான சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை அப்பகுதி மக்கள் விபத்து ஏற்பட கூடாது என பெயர் பலகை கொண்டு மூடி வைத்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணியன், சேலம்.