கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆவின் மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலை மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பள்ளங்கள் இருப்பது தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி விரைந்து சீரமைப்பார்களா?.
-பாண்டியன், கிருஷ்ணகிரி.