கிணறு தூர்வாரப்படுமா?

Update: 2024-12-08 16:57 GMT

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டு கொல்லப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு தற்போது தூர்வாரப்படாமல் புதர் மண்டி காட்சியளிக்கிறது. எனவே இந்த பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமான இந்த கிணற்றை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கவுதம், திருச்செங்கோடு.

மேலும் செய்திகள்

சாலை பழுது