சீரமைக்க வேண்டிய தார்சாலை

Update: 2024-09-29 17:21 GMT

ஏரியூரில் இருந்து ஈச்சப்பாடி, சிடுவம்பட்டி வழியாக பென்னாகரம் செல்லும் தார்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை முழுவதுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை, அரசு பஸ்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. வாகன ஓட்டிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கும் குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

-மாதையன், நாகனூர்.

மேலும் செய்திகள்