சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-09-29 17:09 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்ல கூடிய சாலையும், சூளகிரி நகர் மேம்பாலத்தையொட்டி உத்தனப்பள்ளி வரும் சாலையும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் சாலையோரமாக சாக்கடைக்காக குழி வெட்டப்பட்டு மண் குவியலாக பல மாதங்களாக போடப்பட்டுள்ளன. அவை அகற்றப்படாததால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த சாலையை பார்வையிட்டு, சேதமடைந்த சாலையை சீர்செய்ய வேண்டும். மேலும் சாலையில் பல மாதங்களாக குவியலாக கிடக்கும் மணலை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்திட வேண்டும்.

-முனிவெங்கடப்பா, சூளகிரி.

மேலும் செய்திகள்