வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-09-29 06:39 GMT

கோவை ராமநாதபுரம் சிக்னல் பகுதியில் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அங்கு சாலை பணியும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு பணிகளை விரைந்து முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும்.

ஸ்ரீகனித், ராமநாதபுரம்.

மேலும் செய்திகள்